சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த சீர்காழியைச் சேர்ந்த மாவீரன் என்ற தமிழக மீனவர் உயிரிழந்தார். கடந்த 10ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதில் மாவீரன் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
