Skip to content
Home » தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….

இன்று தமிழ்புத்தாண்டு (சித்திரைக்கனி) கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரது இல்லங்களிலும் பழங்கள் வைத்து வழிபாடு செய்த பின்னர் பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவே காணப்படுகிறது. முக்கியமாக புலியகுளம் விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், மருதமலை, பேரூர் பட்டீசுவரர் கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலை முதலில் இருந்தே பக்தர்கள் அதிக அளவு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு புலியகுளத்தில் உள்ள விநாயகர்

கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உலக புகழ் பெற்ற 19 அடி உயரம் 190 டன் எடை கொண்ட ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு சித்தரை கனியை முன்னிட்டு ஆப்பிள், ஆரஞ்சு, பலாப்பழம் அன்னாசி, வாழைத்தார், மாதுளை, கொய்யா என 2 டன் அளவிற்கு பழங்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.மேலும் இங்கு வரும் பக்தர்கள் அருகம்புல்லை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!