Skip to content
Home » கவர்னர் பதவி…….. தமிழிசை ராஜினாமா …. தேர்தலில் போட்டி

கவர்னர் பதவி…….. தமிழிசை ராஜினாமா …. தேர்தலில் போட்டி

  • by Senthil

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை,  2 பதவிகளையும் ராஜினாமா செய்கிறார்.  அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.  அவர்  இன்று பதவிகளை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று தமிழிசை புதுச்சேரியில் உள்ளார்.

தமிழிசை, புதுச்சேரி,   குமரி, தென் சென்னை ஆகிய 3   தொகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. புதுவையில் பாஜகவினரே தமிழிசைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகி்றார்கள். அதே நேரத்தில் புதுச்சேரி தான் தேர்தல் பணிக்கு எளிதான இடம் என தமிழிசை கருதுகிறார்.  ஆனால் அவர் எங்கு போட்டியிடுகிறார் என  2 தினங்களில் அறிவிக்கப்பட்டு விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!