Skip to content
Home » புதுகை அருகே விளையாட்டு அரங்கம்….. முதல்வர் அடிக்கல் நாட்டினார்

புதுகை அருகே விளையாட்டு அரங்கம்….. முதல்வர் அடிக்கல் நாட்டினார்

  • by Senthil

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில்  சிறு விளையாட்டரங்க கட்டுமானப் பணிகளுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.  புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சி  செய்தி மக்கள் தொடர்புத்துறை  அதிநவீன மின்னணு வீடியோ  வாகனத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன்  இதில் பங்கேற்றார்.  நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா , மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, உள்ளாட்சி  அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!