Skip to content
Home » ஆர்டிஓ ஆபிசில் நடக்கும் காலதாமதத்தை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்….

ஆர்டிஓ ஆபிசில் நடக்கும் காலதாமதத்தை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்….

தமிழ்நாடு மாநில கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல கூட்டமைப்பின் கரூர் மாவட்ட அமைப்பின் பொதுக்குழு கூட்டம் கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் சிவக்குமார்…. தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளில் விறுவிறுப்பு இல்லாமல், தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏற்படும் காலதாமதத்தை விரைவு படுத்த வேண்டும் என்று எங்கள்

சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு ஒன்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து ஆணையருக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.

விரைவில் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கும் மனு வழங்க உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!