Skip to content
Home » தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில்…!

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில்…!

தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை – நெல்லை வந்தே பாரத் ரெயில் திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலிக்கு செல்லும். சென்னை – திருநெல்வேலி இடையே தற்போது 10 மணி நேர இடைவெளியில் விரைவு ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் ‘வந்தே பாரத்’ ரெயில் 8 மணி நேரத்தில் சென்றடையும். திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சென்னைக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்தடையும். பின் சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டு இரவு 11 மணியளவில் திருநெல்வேலி சென்றடையும். இந்த ரெயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரெயில் சேவையை ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மாநில மக்களுக்கு வந்தே பாரத் ரெயில் ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது எனலாம். தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் சென்னை சென்ட்ரல் – கோவை இடையே கடந்த ஏப்.8-ஆம் தேதி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!