Skip to content
Home » தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

  • by Senthil

தஞ்சை திலகர் திடலில்  நாளை(சனி) மாலை  அதிமுக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி முன்னிலையில் திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா சிவா(பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவர்)  உள்பட பலர் அதிமுகவில் இணைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த தகவலை அறிந்த  பாஜ தலைவர் அண்ணாமலை,  சூர்யா சிவாவுடன் பேசி அவரை மீண்டும் பாஜகவில் இணைத்து விட்டதுடன், வருங்காலத்தில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் தருவதாகவும் உறுதி அளித்தாராம்.

இந்த நிலையில் தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!