தஞ்சை டிஐஜியாக ஜியாவுல் ஹக் பதவி யேற்றார். இவர் இதற்கு முன்பு அரியலூர், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணியாற்றியவர். பின்னர் பதவி உயர்வு பெற்று டிஐஜியாக சி.பி.சி.ஐ.டி. மற்றும் விழுப்புரம் சரகத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவர் தஞ்சாவூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து இவர் தஞ்சாவூர் சரக டிஐஜியாக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இங்கு டிஐஜியாக இருந்த ஜெயச்சந்திரன் சென்னை ஊழல் தடுப்பு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.