Skip to content

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறல்-வாலிபர் கைது

  • by Authour

சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் வல்லரசு (26) இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பூனைக்குட்டி பள்ளம் பகுதியில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டுள்ளார் .

இதனை அறிந்த அக்கம்பக்கதவர் கத்தி கூச்சலிட்டதால் வாலிபர் அங்கு இருந்து தப்பி சென்றார்.

பின்னர் அந்த வாலிபரை விரட்டிப்பிடித்து ஜோலார்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர் இதன் காரணமாக ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

error: Content is protected !!