Skip to content
Home » திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

  • by Senthil

செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் உள்ள இருளர் காலணியைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராமு (24). இவருக்குக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. திருமணத்திற்கு முன் ராமு அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கையான சரளா என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வழக்கமான காதலர்களைப் போல் பல இடங்களில் ஒன்றாகச் சேர்ந்து சுற்றியுள்ளனர்.

இந்த தகவல் ராமுவின் பெற்றோருக்கு தெரியவந்தது. சாதாரண காதலையே ஏற்கத் தயங்கும் நிலையில், திருநங்கையைக் காதலித்ததை அவரது பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், காதலைக் கைவிடச் சொல்லி பெற்றோர் கண்டித்தனர். ஆனால், ராமு தனது காதலைக் கைவிடாமல் காதலியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

திருமணம் செய்து வைத்தால் மகன், சரளாவை விட்டு மீண்டு விடுவான் என ராமுவின் பெற்றோர் நம்பினர். இதையடுத்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன் ராமுவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பிறகு ஒரிரு மாதங்கள் சரளாவுடன் பேசாமல் இருந்துள்ளார் ராமு. ஆனால், அவரால் தன் காதலை மறக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ராமு மீண்டும் திருநங்கை சரளாவுடன் பழகித் தொடங்கினார். இதனால், அவர் தனது மனைவியிடம் சரிவர அன்பு காட்டவில்லை என கூறப்படுகிறது. கணவனின் காதல் குறித்து அறிந்த ராமுவின் மனைவி, இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், சரளாவின் பழக்கத்தை விட்டொழிக்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

செங்கல்பட்டு தற்கொலை
அதனால் ராமுவும் அவரது திருநங்கை காதலி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் பழவேலி பாலாற்றங்கரையில் ஒரு மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!