Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை… பெரம்பலூரில் சம்பவம்…

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சிறுகுடல் கிராமம் ஆதி திராவிடர் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை பூசாரி பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் கோவிலை திறக்க வந்தபோது, கோவில் வெளிப்புற கேட்டின் பூட்டு கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த 2 அடி உயர உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பல ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து, தகவல் அறிந்த கோவில் நிர்வாகிகள், மருவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!