உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 163 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்னும் குவித்தனர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 151 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் இந்தியா 296 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸி. 173 ரன்கள் முன்னிலை பெற்றது. ஷர்துல் தாக்கூர் 109 பந்தில் 51 ரன் எடுத்த நிலையிலும், ரகானே 89 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.