Skip to content
Home » வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலை… தஞ்சை அருகே பரபரப்பு..

வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலை… தஞ்சை அருகே பரபரப்பு..

 தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தில் காந்திராஜ் என்பவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் பின்புறம் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அவர் சந்தேகம் அடைந்துள்ளார். முதலில் பாம்பு என்று நினைத்து அருகில் சென்று பார்த்திருக்கிறார். அப்புறம் தான் அது பாம்பு அல்ல, முதலை என்பது தெரியவந்துள்ளது. இதனால் மிரண்டு போன அவர் உடனடியாக வருவாய்த்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதனிடையே குடியிருப்புப் பகுதிக்குள் முதலை புகுந்ததை பார்த்துவிட்டு அப்பகுதி மக்கள், இது ஒன்று தானா அல்லது வேறு முதலைகளும் வந்திருக்குமா என நினைத்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் முதலை விடுவிப்பு
அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் முதலை விடுவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!