Skip to content
Home » தஞ்சையில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடிய இளம்பெண் கைது…

தஞ்சையில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடிய இளம்பெண் கைது…

தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் குலோத்துங்கன் (65). ஓய்வு பெற்ற டிராபிக் வார்டன். கடந்த 5ம் தேதியன்றி இவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் காணாமல் போய்விட்டது. நகைகளை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து குலோத்துங்கள் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார் . இதில் குலோத்துங்கனின் வீட்டில் வேலை பார்க்கும் கரந்தை பூக்குளம் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மனைவி சித்ரா (37) என்பவர் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், சித்ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!