Skip to content
Home » தஞ்சை அருகே அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்…

தஞ்சை அருகே அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் சப் -இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் தேவராயன்பேட்டை பகுதியில் குடமுருட்டி ஆற்றில் இருந்து அரசு அனுமதி இன்றி 2 மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தனர். இந்த 2 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மாட்டு வண்டி ஓட்டி வந்த கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரத்தை சேர்ந்த சுரேஷ் (38) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!