தஞ்சை அரண்மனை அருகே காமராஜர் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இங்கிருந்து தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மன்னார்குடி போன்ற பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள். இந்த மார்க்கெட்டில் பெரிய கடைகள் 93ம், சில்லரை விற்பனை கடைகள் 212ம், தரைக்கடைகளும் உள்ளன. அங்கு பொதுமக்கள் மொத்தமாகவும் மற்றும் சில்லறையாகவும் காய்கறிகள் வாங்கிச் செல்வார்கள்.
இந்நிலையில் அங்கு விற்கப்படாத மீதம் உள்ள காய்கறிகள் அனைத்தும் அருகே உள்ள குப்பை தொட்டியில் கொட்டப்பட்டு வருகிறது. அதேபோல் குப்பை தொட்டியை தவிர மற்ற இடங்களிலும் குப்பைகள் கொட்டுவதால் அதனை சாப்பிடுவதற்காக மாடுகள் மற்றும் குதிரைகள் அதிக அளவில் வலம் வருகின்றன. மேலும் அங்கு அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு அப்புறப்படுத்தாமல் உள்ளது.
இதனால் அங்கு மாடுகள் அதிகளவில் வருகின்றன. மாடுகளால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. அந்த குப்பைகள் சாலையில் கிடப்பதால் மழையின் காரணமாக நனைந்து நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் அங்கு உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துவதோடு அங்கு கால்நடைகள் வராமல் முற்றிலுமாக தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.