Skip to content
Home » தஞ்சையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்….

தஞ்சையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்….

தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கருணாகரன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் சயனைடு கலந்த மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தி வந்தார். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரரிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட எஸ் பி ஆஷிஷ் ராவத் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக மேற்கு இன்ஸ்பெக்டர் வி. சந்திரா கூடுதலாக கவனித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!