Skip to content
Home » தஞ்சை இராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்..

தஞ்சை இராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்..

தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள இராஜகோபால சுவாமி கோவிலில் மூலவராக விஜய வல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார். தஞ்சை சுற்றுவட்டாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு என உள்ள ஒரே கோவில் இதுவாகும்.

இங்கு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரக்கூடிய சித்திரை நட்சத்திரம் அன்று மட்டுமே மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர மூலஸ்தானத்தில் எழுந்தருளி காட்சி காட்சி தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை தரிசிக்க முன்ஜென்ம கர்மவினைகளும் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆடி மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மூன்று சக்கரத்தாழ்வார்களும் சிறப்பு பாலாபிஷேகம், சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனை தொடர்ந்த சிறப்பு அலங்காரமும் தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து முப்பெரும் தேவியர்களாக திகழும் மிகவும் பிரசித்தி பெற்ற உயரமான விஷ்ணு துர்க்கை அம்மன், கோலாலம்பூர் மகாலெட்சுமி, சிவ துர்க்கை அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!