Skip to content
Home » தஞ்சை ரயிலடியில் ஆர்ப்பாட்டத்திற்கு தற்காலிக தடை…

தஞ்சை ரயிலடியில் ஆர்ப்பாட்டத்திற்கு தற்காலிக தடை…

  • by Senthil

தஞ்சை ரயிலடியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயிலடி பகுதியில் தஞ்சாவூர் நகர உட்கோட்ட காவல் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளதாவது… ரயில் நிலையத்தின் முன் பக்க நுழைவு வாயிலில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடமாக இருப்பதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதனால், பராமரிப்பு பணிகள் முடியும் வரை ரயில்

நிலையத்தின் முன் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!