தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2023-2024ம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருகாமையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1079 மாணவர்களுக்கு ரூ.52 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பு சைக்கிள்களும், 1432 மாணவிகளுக்கு ரூ.68 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பு சைக்கிள்களும் என மொத்தம் ரூ.1.21 கோடி மதிப்புள்ள விலையில்லை சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
விழாவில் தஞ்சை எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துச்செல்வன், தஞ்சாவூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் மேத்தா, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் அருண பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.