Skip to content
Home » தஞ்சையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

தஞ்சையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் துருசுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி தலைமை வகித்தார். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

பேரணியின் போது பள்ளி வயது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம், கல்லாமையை  இல்லாமையாக்குவோம், பெண்களைப் படிக்க வைப்போம், சமுதாய வளர்ச்சிக்கு வழிவகுப்போம் என்பன போன்ற கோஷங்கள் எழுப்பியபடி மாணவர்கள் சென்றனர். இதில் ஆசிரியர்கள், எஸ்.எம்.சி , பி டி ஏ உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியை மேனகா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!