Skip to content
Home » தஞ்சை அருகே வாக்குவாதத்தில் கீழே விழுந்த நபர் பலி… வாலிபர் கைது…

தஞ்சை அருகே வாக்குவாதத்தில் கீழே விழுந்த நபர் பலி… வாலிபர் கைது…

தஞ்சை அருகே தோட்டக்காடு காமராஜர் நகரை சேர்ந்த சாமிஅய்யா என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (50) கூலித் தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. இவர்களின் மகன் அபிஷேக் (22. மற்றும் 18 வயதில் ஒரு மகள் உள்ளார்.

நேற்று அபிஷேக்கிற்கு பிறந்தநாள் என்பதால் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்களை அழைத்து கொண்டாடினர்.
அப்போது அதே பகுதி மாதா கோவில் தெருவை சேர்ந்த தாஸ் என்பவரின் மகன் ரூபன் (23) மது அருந்திவிட்டு பிறந்தநாள் விழாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

குடிபோதையில் ரூபன் சத்தியமூர்த்தியின் மகளை கிண்டல் செய்துள்ளார். இதை சத்தியமூர்த்தி கண்டித்து ரூபனை திட்டி அனுப்பி உள்ளார். பின்னர் நேற்று இரவு சத்தியமூர்த்தி தனது மனைவி சசிகலாவுடன் ரூபன் வீட்டுக்குச் சென்று தன் மகளை எதற்காக கிண்டல் செய்தாய் என்று கேட்டு மீண்டும் கண்டித்துள்ளார். பின்னர் இருவரும் வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது தோட்டக்காடு காமராஜர் நகர் பகுதியில் சத்தியமூர்த்தி மற்றும் சசிகலாவை ரூபன் வழிமறித்து தகராறு செய்துள்ளார்.

இதில் அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட வாக்குவாதம் உச்சம் அடைந்ததில் ரூபன் ஆத்திரமடைந்து சத்தியமூர்த்தியை பிடித்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் தடுமாறி சாலையில் விழுந்த சத்தியமூர்த்தி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு தொலைந்து சென்று சத்தியமூர்த்தி உடலை மீட்டி பிரேத பரிசோதனைக்காக தனி மடத்த கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!