Skip to content
Home » டூவீலர் மீது கார் மோதி விபத்து… தஞ்சையில் வாலிபர் பலி…

டூவீலர் மீது கார் மோதி விபத்து… தஞ்சையில் வாலிபர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் அருகே ராராமுத்திரகோட்டை புது தெரு கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மாணிக்கவாசகம் (30). இவர் தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் உள்ள பிராய்லர் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக தனது பைக்கில் புறப்பட்டார். அப்போது மாரியம்மன் கோவில் அருகே முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது திருவாரூர் சென்று விட்டு திரும்பிக் கொண்டு இருந்த கரூர் மாவட்டம் வல்லக்குளத்தாம் பாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் மணிகண்டன் (31) என்பவர் ஓட்டி வந்த கார் மாணிக்கவாசகம் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாணிக்கவாசகம் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் மாணிக்கவாசகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் ஓட்டி வந்த மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!