Skip to content
Home » கரூர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த 7ம் வகுப்பு மாணவன்..

கரூர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த 7ம் வகுப்பு மாணவன்..

  • by Senthil

கரூரில் திண்பண்டங்கள் மீது ‘ஸ்டேப்ளர் பின்’ அடிக்க தவிர்க்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்த பள்ளி மாணவன் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பூச்செண்டு கொடுத்து நன்றி தெரிவித்த மாணவன்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு எஸ்.பி.காலனியில் வசிப்பவர் ரவீந்திரன். இவரது மகன் விஸ்வக் நித்தின். தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவன் கடந்த திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் பள்ளி மாணவர்கள் விரும்பி உண்ணக்கூடிய கடலை, பட்டாணி, உள்ளிட்ட தின்பண்டங்கள் பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்து அதனை அட்டையில் ஸ்டேப்ளர் பின் அடித்து விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்கு மாற்றாக நூலில் தைத்து விற்பனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த தின்பண்டங்களை எடுத்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தார்.

அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் சிவராம பாண்டியன் உத்தரவின் பெயரில் உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரைவீரன் மாணவனின் வீட்டிற்கு நேரில் சென்று புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த கடித நகலை வழங்கியதுடன், வணிகர் சங்க பொறுப்பாளரின் தொலைபேசி மூலம் பேச வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது பெற்றோர் மற்றும் சிலருடன்  வந்து மாணவன் கலெக்டருக்கு நன்றி தெரிவிக்க வந்தார்.  பொதுமக்கள் குறைதீர் கூட்டரங்கில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத்திடம், மாணவன் பூச்செண்டு கொடுத்து நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!