Skip to content
Home » வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வந்தது இந்நிலையில் கிள்ளியூர் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சார்ந்த விவசாயக் கூலி தொழிலாளி இளையராஜா(42) என்பவர் முத்துக்குமார் என்பவரது விவசாய நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென பலத்த சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இளையராஜா உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த செம்பனார்கோயில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இளையராஜாவிற்கு அமுதா(35) என்ற மனைவியும் அஜய்(17) என்ற மகனும் கார்த்திகா(16) என்ற மகளும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!