Skip to content
Home » தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ. 1 லட்சம் மோசடி….பரபரப்பு புகார்…

தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ. 1 லட்சம் மோசடி….பரபரப்பு புகார்…

தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ. 1 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்து விட்டதாக தயாநிதி மாறன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு கணக்கிலிருந்து ரூ. 1லட்சம் மோசடி செய்துள்ளனர். இந்தியில் பேசிய நபர்கள் 3 முறை தொலைபேசியில் அழைத்து மோசடி என புகார் அளித்துள்ளனர். தயாநிதி மாறனின் மனைவி மலேசியாவில் இருப்பதாகவும் , அவருக்கு செல்போனில் இந்த அழைப்புகள் வந்ததாகவும் புகார் அளித்துள்ளனர். இந்தியில் பேசிய நபர்கள் 3 முறை அழைத்த பின் திடீரென ஒரே பரிவர்த்தனையில் ரூ. 1லட்சம் எடுக்கப்பட்டதாக புகார் மனுவில் தகவல் தெரிவித்துள்ளனர்.  இப்புகார் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!