Skip to content
Home » சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

அரியலூர் மாவட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார் (36) கொத்தனாரான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் மீன்சுருட்டி அருகே குண்டவெளி பகுதியில் கட்டிட வேலைக்கு செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காட்டுமன்னார்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் பாலகுமாரனிடம் கேட்ட போது தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தலைமறைவாக இருந்த பாலகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!