சென்னை மாமல்லபுரத்தில் 10,12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் பாராட்டு விழா நடந்து வருகிறது. மாணவர்களுடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் தவெக தலைவர் விஜய்.
16 மாவட்டங்களில் உள்ள 88 சட்டமன்ற தொகுதி மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மாணவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட விஜய் . மாணவர்களை கவுரவித்தார். கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் பேசியதாவது… மை டியர் யங் லீடர்ஸ். நீட் மட்டும் தான் உலகமா.. நீட் தேர்வை தாண்டி உலகம் மிகப்பெரியது. படிக்கும் போது ஸ்ட்ரெஸ் ஆக வேண்டிய அவசியம் இல்ல. ஜனநாயக கடமையை
ஒழுங்காக செய்ய சொல்லுங்க. பெற்றோரிடம் ஊழல் இல்லாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்க. குழந்தைகளை போர்ஸ் பண்ணாதீங்க. குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த துறையில் சாதித்து காட்டுவார்கள். எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ணமாட்டோமா.பெரியாருக்கே சாதி சாயம் பூசுகிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். வீட்டில் உள்ளவர்களை ஜனநாயக கடமையை சரியாக செய்ய சொல்லுங்கள். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டும் போடும் கலாச்சாரத்தை தவிர்க்க வேண்டும் என்று பேசினார்.


