Skip to content
Home » தெலுங்கானா…. தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு கத்திக்குத்து

தெலுங்கானா…. தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு கத்திக்குத்து

  • by Senthil

119  தொகுதிகளைக்கொண்ட தெலுங்கானா மாநிலத்தில்  வரும் நம்பவர் 30ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் ஆளும்  பிஆர்எஸ் கட்சி வேட்பாளராக  துப்பாக் தொகுதியில்  தற்போதைய எம்.பி. பிரபாகர் ரெட்டி நிறுத்தப்பட்டிருந்தார். அவர் இன்று  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

கூட்டத்தில்  அவருக்க கை கொடுப்பது போல் வந்த மர்மநபர் எம்பி பிரபாகர் ரெட்டியை கத்தியால் குத்தினார்.  கத்தியால் குத்திய நபரை பிஆர்எஸ் கட்சி தொண்டர்கள் மடக்கிப்பிடித்து சரமாரி தாக்குதல் நடத்தினர்.  பின்னர் பிரபாகர்  ரெட்டியை அவரது காரிலேயே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  கத்தியால் குத்திய நபரை  போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!