Skip to content
Home » வீட்டில் தனியாக இருந்த சிறுமி பலாத்காரம்… வாலிபர் கைது..

வீட்டில் தனியாக இருந்த சிறுமி பலாத்காரம்… வாலிபர் கைது..

தேனி மாவட்டத்தில் கோடேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி ஆசை வார்த்தைகள் கூறி தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.  பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்திருக்கிறார் அந்த சிறுமி.   வீட்டில் தனியாக 14 வயது சிறுமி இருக்கிறார் என்பதை அறிந்து அவரிடம் சென்று காதலிப்பதாக சொல்லி நாடகமாடி,  பின்னர் ஆசை வார்த்தைகள் சொல்லி தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் அந்த இளைஞர்.

இதற்குள் சிறுமி வீட்டில் இல்லாததால் பெற்றோர் பல இடங்களில் தேடியிருக்கிறார்கள் .  பின்னர் வீடு திரும்பிய சிறுமி தனக்கு நடந்ததை சொல்லி அழுது இருக்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த தாய் மகளைக் கடுமையாக கண்டித்து இருக்கிறார்.   கம்பை எடுத்து அடித்திருக்கிறார்.  இதில் சிறுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று இருக்கிறார்கள் .

அங்கு இந்த காயம் குறித்து போலீசார் விசாரித்த போது தான் எட்டாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி பள்ளிக்குச் செல்லாமல் படிப்பை நிறுத்திவிட்டு இருந்ததாகவும் வினோத் குமார் என்ற இளைஞர் ஆசை வார்த்தை சொல்லி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்பது தெரிய வந்திருக்கிறது.  இதை அடுத்து  சிறுமியிடம் புகாரை பெற்று தேனி அனைத்து மகளிர் போலீசார் வினோத் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!