Skip to content
Home » திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமிதரிசனம்..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமிதரிசனம்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஏழுமலையான் தரிசிக்க குடும்பத்தினருடன் இன்று திருமலைக்கு வருகை தந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர். திருமலையில் தங்கிய அவர் காலை அபிஷேக சேவையில் ஏழுமலையானை தரிசித்தார்.

தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசிர்வாதம் செய்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர். அவற்றைப் பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த துர்காவுடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அறங்காவலர் குழு உறுப்பினர் பாலு குடும்பத்துடன் உடன் வந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!