Skip to content
Home » திருப்பதியில் மொட்டை போட்ட தயாரிப்பாளர் ரவீந்தர்…

திருப்பதியில் மொட்டை போட்ட தயாரிப்பாளர் ரவீந்தர்…

  • by Senthil

நடிகை, தொகுப்பாளினி எனப் பன்முகம் கொண்ட மகாலட்சுமிக்கும், திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த ஜோடியின் திருமணம் இணையதளங்களில் பெரும் வைரலானது.

நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்வில் ரவீந்தரின் பல பிரச்சினைகள் துரத்த ஆரம்பித்தது. அதாவது, லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனரான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில் கடந்த வருடம் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு அவர் ஜாமினில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தார்.

ரவீந்தர் சந்திரசேகர்
ரவீந்தர் சந்திரசேகர்

இதோடு அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதால் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனால், ஆக்சிஜன் மாஸ்க்கோடு வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கூட்டினார். இப்படி பணமோசடி, உடல் நலப் பிரச்சினைகள் தொடர்ந்து துரத்த இதற்கெல்லாம் தீர்வாக ஆன்மிக வழியை நாடியிருக்கிறார் ரவீந்தர். அதாவது, சிறிது நாட்களாக சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தவர் இப்போது திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்துள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார்.

மேலும், ‘கடினமான சூழ்நிலைகள்தான் உங்களின் சிறந்த பக்கத்தை வெளி உலகிற்கு கொண்டு வரும்’ என தத்துவமும் பேசியுள்ளார். நீண்ட நாட்கள் கழித்து சமூகவலைதளத்திற்கு வந்துள்ளவரை வெல்கம் சொல்லி வரவேற்றிருக்கிறார் மனைவி மகாலட்சுமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!