Skip to content
Home » திருப்பதியில் ரஜினி மகள்கள் சாமிதரிசனம்…

திருப்பதியில் ரஜினி மகள்கள் சாமிதரிசனம்…

  • by Senthil

புதிய படங்கள் வெளியீடு, வேண்டுதல் நிறைவேற்றுதல், விசேஷ தினங்கள், தங்களுடைய பிறந்தநாள் என திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பிரபலங்கள் வருவது வழக்கம். அதுபோன்ற சமயங்களில் அவர்களது புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் நடிகர் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். செளந்தர்யா தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடனும் வந்திருந்தார்.

திருப்பதியில் சுவாமி தரிசனம்...
திருப்பதியில் சுவாமி தரிசனம்…

விஐபி தரிசனத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானின் சேவையில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தரிசனம் முடிந்ததும், ஆலய ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேதசிர்வசனம் செய்தனர். பின்பு கோயில் அதிகாரிகள் அவர்களுக்கு ஸ்ரீவாரி தீர்த்தப்பிரசாதம் வழங்கி, பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர். தரிசனம் முடித்து வெளியே வந்ததும் அங்கு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துவிட்டு புறப்பட்டனர்.

 

ஐஸ்வர்யாவைத் தொடர்ந்து செளந்தர்யாவும் இப்போது மீண்டும் இயக்கத்திற்கு திரும்ப இருக்கிறார். கிரிக்கெட்டர் கங்குலியின் பயோபிக்கை அவர் இயக்க இருக்கிறார் எனவும் இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!