Skip to content
Home » திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி குடும்பத்துடன் சாமிதரிசனம்..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி குடும்பத்துடன் சாமிதரிசனம்..

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏழுமலையான் தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தார். திருப்பதி மலையில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து திருப்பதி மலையில் உள்ள வராக சாமி கோவிலுக்கு நேற்று இரவு குடும்பத்துடன் சென்ற அவர் வராக சாமியை வழிபட்டார்.

இரவு திருப்பதி மலையில் தங்கிய அவர் இன்று காலை கோவிலுக்கு சென்று அஷ்டதள பாத பத்மாராதனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.

பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் ஏழுமலையான் கோவில் எதிரிலிருக்கும் அகிலாண்டம்

பகுதிக்கு சென்று தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய எடப்பாடி பழனிச்சாமி மனநிறைவு ஏற்படும் வகையில் இன்று ஏழுமலையானை வழிபட்டு இருக்கிறேன் என்று கூறினார்.

அயோத்தி ராமர் கோவில் பற்றிய நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அயோத்தி ராமர் அனைவருக்கும் பொதுவானவர். யார் விரும்பினாலும் அங்கு சென்று வழிபாடு மேற்கொள்ளலாம் என்று கூறினார். திருப்பதி கோவிலை போல் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களிலும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர் அந்த கட்டுப்பாடுகள் ஏற்கனவே இருப்பவை தான்

என்றும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை தலைமை கழகம் அறிவித்த தேர்தல் பணிக்குழு துவக்கி உள்ளது என்றும் அப்போது கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!