தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் திருக்கோயில் அறங்காவலர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.
அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரன், ஸ்ரீதர், கார்த்திக், கணேசன், ராஜலட்சுமி ஆகியோர் தஞ்சாவூர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர், தேர்தல் அதிகாரி கவிதா, தஞ்சாவூர் சரக ஆய்வாளர் பாபு மற்றும் சபையோர் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து ஐந்து நபர்களில் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட்டு ராஜேந்திரன் அறங்காவலர் குழு தலைவராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் தஞ்சாவூர் மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் அரசாபகரன், திருவையாறு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராஜன், சட்டமன்ற முன்னாள் கொறடா ஜெயக்குமார், திருவையாறு வடக்கு ஒன்றிய செயலாளர் சிவசங்கரன், திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் கௌதமன், தமிழிசை மன்ற பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.