திருவாரூர் அருகே வலங்கைமான் பகுதியில் 12 பட்டாசு உற்பத்தி ஆலைகளும், 48 பட்டாசு கடைகளும் இயங்கி வருகின்றன. இங்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.
இதேபோன்று வலங்கைமான் பகுதியில் பல இடங்களில் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வெடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.