Skip to content
Home » திருவெறும்பூர் தாலுகா அலுவலகம் முற்றுகை…. பரபரப்பு..

திருவெறும்பூர் தாலுகா அலுவலகம் முற்றுகை…. பரபரப்பு..

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உள்ள திருநெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு 1997ம் ஆண்டு சுமார் 964 பேருக்கு இலவச வீட்டு மனைகளை ஒதுக்கி கொடுத்தது. இந்நிலையில் அந்த வீட்டு மனைகளில் சிலர் குடியிருந்து வருகின்றனர். பலர் பிழைப்பு காரணமாக வெளியூர் சென்று தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு ஏழை எளிய பொது மக்களுக்கு வழங்கிய வீட்டு மனைகளை தற்போது ரத்து செய்துள்ளதாகவும், மேலும் புதிய பயனாளிகளை தேர்வு செய்து வழங்க உள்ளதாகவும் கூறி அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த சில அவரது வீடுகளையும் இடித்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் சிலர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் நடவடிக்கை இல்லாததால் நேற்று திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரை

சந்தித்து மக்கள் குறைதீர்க்கும் முகாமில் எங்கள் இடம் எங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் இன்று திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்திற்கு வந்த வீட்டு மனை பயனாளிகள் எங்கள் இடத்தினை வழங்க வேண்டும் என தாலுகா அலுவலகம் முன்பு திரண்ட முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு வந்த தாசில்தார் பயனாளிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து கோரிக்கை மனு மீதான விசாரணை முடிந்த பிறகு தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு உண்டான இடத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தாலுக்கா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!