திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா வரும் 26ம் தேதி மாலை திருவையாறில் தொடங்குகிறது. விழாவுக்கு தியாக பிரம்ம மகோத்சவ சபையின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்குகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை வரும் 30ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒருசேர பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதையொட்டி 30ம் தேதி தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பிப்ரவரி 10ம் தேதி வேலை நாளாக இருக்கும் என கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.