தூத்துக்குடி அருகே சாலையோரமாக நடந்து சென்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்து 30 வயது கூலித் தொழிலாளி போலநாத் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்த அவர், நேற்று இரவு பணி முடிந்து சாலையோரமாக நடந்து சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
கார் மோதி வடமாநில தொழிலாளி பலி..
