திருவண்ணாமலையில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மகா தீபம் ஏற்றப்படும் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தீபத்தைத் தரிசனம் செய்ய பக்தர்கள் மலையேறும் பாதையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இக்குழுவினர் நேற்று காலை மலையேறும் குழு மற்றும் பாதுகாப்புக் குழுவினருடன், மகா தீப மலையில் ஆய்வு செய்தனர். அங்குள்ள மண், சிறிய கற்கள் மற்றும் பாறைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, மாதிரிகளையும் சேகரித்துள்ளனர்.
வல்லுநர் குழுவுடன் சென்ற ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் கூறும்போது, “வல்லுநர் குழு, தங்களது ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கும். அதனடிப்படையில் கார்த்திகை தீபத் திருநாளன்று. மகா தீப மலை மீது பக்தர்கள் ஏறுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும்” என்றார்.

