Skip to content
Home » திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….மனைவியின் கள்ளக்காதலன் வெறி

திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….மனைவியின் கள்ளக்காதலன் வெறி

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்  அடுத்த  கீழ குமரேசபரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த ஆறுமுகம்  மகன் சரவணன் (48),   பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி  சவுந்திரவல்லி (45) . இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் வரகனேரியை சேர்ந்தவர்கள், திருமணத்திற்கு பின்னர்   கீழ குமரேசபுரத்தில் குடியேறினர். இவர்களுக்கு  ஆஷா சர்மிலி, சுவாதி, ஹரிணி என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

ஆஷா சர்மிலி சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். , சுவாதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக இருக்கிறார். ஹரிணி திருவெறும்பூர்  தொழிற்பயிற்சி பள்ளியில்  படித்து வருகிறார்.

கடந்த வாரம்,  சவுந்திரவல்லி தனது மகள் ஹரிணியை அழைத்து கொண்டு சென்னையில் உள்ள மகள்களை பார்ப்பதற்காக  சென்றார்.இந்நிலையில் இன்று சரவணன் வீட்டிலேயே வெட்டி படுகொலை  செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த  திருவெறும்பூர் போலீசார்,  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.   கொலை செய்யப்பட்டு கிடந்த  சரவணனின் மனைவி சவுந்திரவல்லி, எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு பந்தல் காண்ட்ராக்ட்டில் வேலை பார்த்து வந்தார்.   அங்கு மேலாளராக உள்ள லால்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55)என்பருடன் சவுந்திரவல்லிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

இந்த கள்ளக்காதலை  சரவணன் கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில்  கடந்த வாரம், சவுந்திரவல்லி தனது கடைசி மகளை அழைத்துக்கொண்டு சென்னை சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு ராதாகிருஷ்ணன்,  சரவணன் வீட்டிற்கு வந்து சரவணனுக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்தார்.  அப்போது அவர்களுக்குள் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், சரவணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.

கொலையை திட்டப்படி முடித்து விட்ட  ராதாகிருஷ்ணன்,   இதுகுறித்து  சவுந்திரவல்லிக்கு போன் செய்து தகவல் தெரிவித்துஉள்ளார். அதன் அடிப்படையில்  சவுந்திரவல்லி, பந்தல் காண்ட்ராக்டர் பால்ராஜ் என்பவருக்கு தகவல் சொல்லி  பார்க்கும்படி கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து பால்ராஜ் பார்த்தபோது சரவணன்  கொலை செய்யப்பட்டது. தெரியவந்தது அதன் அடிப்படையில் அவர் திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் திருவெறும்பூர் போலீசில்  சரணடைந்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் அவரிடம்  தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலையில் சவுந்திரவல்லியும் கைதாகலாம் என தெரிகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!