திருச்சி கருமண்டபம் பாலம் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒரு வாலிபர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தபோது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னம்பலம் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதே போன்று திருச்சி கோரையாற்று பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த காந்திக்மார்க்கெட் பகுதியை சேர்ந்த கணேஷ் (26) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் போலீசார் ஜாமினில் விடுதலை செய்தனர்.

