Skip to content
Home » ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்…

ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்…

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் இந்த தொகுதிக்கு வரும் பிப். 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (31ம் தேதி) தொடங்கி வருகிற 7ம் தேதி வரை நடக்கிறது. 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை தவிர்த்து மற்ற நாட்களில் தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிவரை வேட்பு மனுக்களை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம் தாக்கல் செய்யலாம்.
மனு தாக்கலின் போது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலே அரசியல் கட்சியினர் நிற்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் 4 புறமும் 100 மீட்டர் தூரத்துக்கு எல்லை கோடுகள் வரையபப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், கோஷம் போட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!