Skip to content
Home » வயலில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு… தஞ்சை அருகே பரிதாபம்…

வயலில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு… தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சோலைபூஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (35). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தமிழரசன் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வருகிறார். சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை உழும் பணிகளுக்காக அவர் சென்று வந்தார். வழக்கம்போல் நேற்று கிடங்காநத்தம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான வயலில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார்.

பாபநாசம் அரசு மருத்துவமனை
அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சேற்றில் தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ட்ராக்டருக்கு அடியில் சேற்றில் தமிழரசன் சிக்கி உயிருக்கு போராடினார். இது குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறையினரும், போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் தமிழரசனை மீட்டு அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பாபநாசம் காவல் நிலையம்

 

ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தமிழரசனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!