ஆபத்தில் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் வாகனமே ஒரு பெண்ணின் உயிருக்கு எமனாக மாறியுள்ளது. காரைக்கால் அருகே ரேவதி (45) என்பவர் திடீர் நெஞ்சு வலி காரணமாக அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். வென்டிலேட்டருடன் ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்தபோது, ஆக்சிஜன் டியூப் திடீரென வெடித்தது. இதனால், ரேவதி பரிதாபமாக பலியானார்.
