அதிமுக பொதுக்குழு முடிவுகள் செல்லும் என்றுஐேகார்ட் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதனை கொண்டாடி வருகின்றனர் – இதன் ஒரு
பகுதியாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் முன்னாள் எம்.பி. குமார் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இது தொடர்பாக ப. குமார் கூறும்போது, எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட்டார். அவர் தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரம். அவரது தலைமையில் தமிழகம் விரைவில் மீண்டும் பொற்கால ஆட்சி தரும் என்றார்.