Skip to content
Home » திருச்சிக்கு வந்த விமானத்தின் கதவு திறக்காத விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..

திருச்சிக்கு வந்த விமானத்தின் கதவு திறக்காத விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு  கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் 158 பயணிகளுடன்  வந்தது. அதில் வந்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்க முயன்றபோது திடீரென கதவை திறக்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர். ஒன்றரை மணி நேரம்  பயணிகள் விமானத்திற்கு உள்ளேயே தவித்தனர். தொழில் நுட்ப வல்லுநர்கள் வந்து  கதவை திறந்தனர். இதையடுத்து 10.15 மணிக்கு வந்த விமானத்தில் இருந்து நள்ளிரவு  11.30 மணியளவில் பயணிகள் கீழே இறங்கினர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விமானநிலைய ஆணையம் உத்தரவிற்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஏர்ஏசியா நிறுவனம் உரிய பதில் அளிக்கவும் கூறப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!