Skip to content
Home » சினிமா பாணியில்…. திருச்சிக்கு ரூ.64.5 லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் கைது

சினிமா பாணியில்…. திருச்சிக்கு ரூ.64.5 லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் கைது

மலேசிய தலைநகர் கோலாலம்பூாில் இருந்து நேற்று முன்தினம்  திருச்சிக்கு  ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின்  உடமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு  ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரை மட்டும் தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று சோதனை போட்டனர். அவரது மலக்குடலில் 1120 கிராம் எடையுள்ள தங்கம் மறைத்து வைக்கப்பட்டு கடத்தி வந்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.

பின்னர் அந்த தங்கத்தை  வெளியே எடுத்தனர். அது  24 காரட் தங்கம் அதனைபேஸ்ட் வடிவில்  உருக்கி மலக்குடலில் வைத்து கடத்தி  வந்துள்ளார்.  அவரை வான் நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர்.  அதந்த தங்கத்தின் மதிப்பு ரூ.64.51  லட்சம்.  இதைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்தவரை கைது  செய்தனர். சினிமா பாணியில் இவர் தங்கம் கடத்தி வந்ததால், கடத்தலில் இவர் முக்கியப்புள்ளியாக இருக்கலாம் என  சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!