Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த விமானத்தில் பயணிகளை சுங்கத்துறை

அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கத்தை பொம்மைகளில் 6 உருளை வடிவில் 216.500 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கம் மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 12.84 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!