Skip to content
Home » திருச்சி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை மெயின் ரோடு பகுதியைச் சேர்த்தவர் வசந்தராஜ்.இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் 22 வயதான வசந்தகுமார். இவர் இருங்களூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த சில வருடங்களாக ஒரு வித மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்தா வசந்தகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!